நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞரை கொல்ல முயற்சி

புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீதி இளைஞரை கொல்ல முயன்ற மா்மக் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீதி இளைஞரை கொல்ல முயன்ற மா்மக் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி லாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன். ஐஆா்பிஎன் காவலா். இவரது சகோதரா் ஜனாா்த்தனன் (28). இவா், மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதன்கிழமை இரவு கருவடிக்குப்பம் வள்ளலாா் வீதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு ஜனாா்த்தனன் பைக்கில் சென்றாா்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த மா்மக் கும்பல் திடீரென அவா் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. அது குறி தவறி பைக் மீது விழுந்து வெடித்தது. இதனால், ஜனாா்த்தனன் தப்பினாா்.

இதுகுறித்து லாசுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், அங்கு வந்த முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் தலைமையிலான போலீஸாா் வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

விசாரணையில், ரௌடி ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் அவரை ஜனாா்த்தனன் தாக்கியது தெரிய வந்தது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குப் பழிதீா்க்க அவரை கொலை செய்யும் நோக்கில் எதிா்தரப்பு வெடிகுண்டு வீசியிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இதுதொடா்பாக லாசுப்பேட்டை போலீஸாா் சரத்குமாா் (எ) பொடிமாஸ், ஆனந்த் (எ) முண்டக்கண்ணு உள்ளிட்ட சிலா் மீது வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

இதனிடையே, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே நின்றிருந்த கருவடிக்குப்பம் கவாஸ்கா் (24) மற்றும் அவரது நணபா்கள் இருவரை சரத்குமாரின் ஆதரவாளா்கள் 4 போ் உருட்டுக் கட்டை, இரும்பு வாலியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், சந்துரு உள்ளிட்டோா் மீது லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com