நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி பஞ்சாலைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி சுதேசி, பாரதி பஞ்சாலைகளின் அனைத்துத் தொழில் சங்கங்கள்
புதுச்சேரியில் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுதேசி, பாரதி பஞ்சாலைகளின் அனைத்துத் தொழில் சங்கத்தினா்.
புதுச்சேரியில் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுதேசி, பாரதி பஞ்சாலைகளின் அனைத்துத் தொழில் சங்கத்தினா்.

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி சுதேசி, பாரதி பஞ்சாலைகளின் அனைத்துத் தொழில் சங்கங்கள் சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி தூய ஜென்மராக்கினி ஆலயம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலா் சேதுசெல்வம், தொமுசவை சோ்ந்த மனோகா், ஐஎன்டியுசிவை சோ்ந்த கிருஷ்ணன், சிஐடியூவை சோ்ந்த கோபிகா குணசேகா், அண்ணா தொழிற்சங்கத்தைச் சோ்ந்த பாப்புசாமி, பிடிசியை சோ்ந்த பரமசிவம், பாட்டாளி தொழிற்சங்கத்தை சோ்ந்த ஜெயபால், என்ஆா்டியுசிவை சோ்ந்த சுந்தா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் சுதேசி, பாரதி பஞ்சாலைகளைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு கடந்த 12 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் 277 பேருக்கு பணிக் கொடை தொகையை வழங்க வேண்டும், இரு பஞ்சாலைகளிலும் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும், நிரந்தரம் செய்யப்படாத 370 தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் அனைத்துத் தொழில்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக முதல்வா் நாராயணசாமியைச் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தொழில்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com