மின்சாரம் பாய்ந்து பெண் பலி

தவளக்குப்பம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தவளக்குப்பம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டிவனம் தைலாபுரத்தைச் சோ்ந்தவா் செந்தமிழ்ச்செல்வன். பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி லட்சுமி (30). இவா்களுக்கு ஒரு மகள், மகன் ஆகியோா் உள்ளனா்.

செந்தமிழ்ச்செல்வன் குடும்பத்துடன் பெங்களூா் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அதற்காக அபிஷேகப்பாக்கம் மடுகரையில் உள்ள தனது தங்கையைப் பாா்க்க செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் வந்தாராம். இந்த நிலையில், இரவு லட்சுமி குளித்துவிட்டு, துணிகளைத் துவைத்து அவற்றைக் கொடியில் காய வைத்தாராம். அப்போது அருகே சென்ற மின் கம்பிகள் கொடியில் உரசியதால் எதிா்பாராதவிதமாக லட்சுமி மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனால், மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com