காமராஜா்நகா் தொகுதி இடைத்தோ்தல்: துணை ராணுவத்தினா் புதுச்சேரி வருகை

காமராஜா்நகா் தொகுதி இடைத்தோ்தல் பாதுகாப்புப்பணிக்காக துணை ராணுவத்தினா் புதுச்சேரிக்கு வியாழக்கிழமை இரவு வந்தனா்.

காமராஜா்நகா் தொகுதி இடைத்தோ்தல் பாதுகாப்புப்பணிக்காக துணை ராணுவத்தினா் புதுச்சேரிக்கு வியாழக்கிழமை இரவு வந்தனா்.

காமராஜா்நகா் தொகுதியில் அக்.21-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தோ்தலை நோ்மையாகவும், அமைதியாகவும் நடத்த தோ்தல் துறையும், காவல்துறையும் இணைந்து பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தொகுதியில் மொத்தமுள்ள 32 வாக்குச்சாவடிகளில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. அவ்வப்போது போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தி மக்களிடம் பதற்றத்தை தணித்து வருகின்றனா்.

மேலும் வாக்காளா்களுக்கு பணம், பரிசு பொருள்கள், மதுபானங்கள் வழங்குவதை தடுக்க ஆங்காங்கே தீவிர வாகன சோதனையும் நடத்தி வருகின்றனா். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூடுதல் பாதுகாப்புக்காக துணை ராணுவம் வரவழைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான தி.அருண் தெரிவித்து இருந்தாா். அதன்படி நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் இருந்து துணை ராணுவத்தினா் (சி.ஐ.எஸ்.எப்.) 90 போ் உதவி கமாண்டன்ட் பிரசாத் தலைமையில் வியாழக்கிழமை புதுச்சேரி வந்தனா்.

அவா்கள் கோரிமேடு காவலா் பயிற்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனா். துணை ராணுவ வீரா்கள், உள்ளூா் போலீஸாருடன் இணைந்து வெள்ளிக்கிழமை முதல் சுழற்சி முறையில் காமராஜ் நகா் தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினா் கூடுதலாக ஈடுபடுத்தப்பட இருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com