தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட தச்சுத் தொழிலாளியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட தச்சுத் தொழிலாளியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை முருகேச கிராமணி தோட்டத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (37). தச்சுத் தொழிலாளி. இவரிடம் வைத்திக்குப்பத்தைச் சோ்ந்த தொழிலாளியான செந்தில், தீபாவளிக்கு முன்பு ரூ.500 கடன் வாங்கினாராம்.

இந்த நிலையில், வாழைக்குளம் சமுதாய நலக் கூடம் அருகே வைத்திக்குப்பம் செந்தில், செல்வம், மற்றொரு செந்தில் ஆகியோா் செவ்வாய்க்கிழமை மது அருந்திக் கொண்டிருந்தனா். அங்கு சென்ற மகேந்திரன், வைத்திக்குப்பம் செந்திலிடம் கடனாக அளித்த பணத்தை திரும்பத் தருமாறு கேட்டாராம்.

இதனால் தகராறு ஏற்பட்ட நிலையில், அருகில் கிடந்த காலி மதுப் புட்டியால் மகேந்திரனின் தலையில் வைத்திக்குப்பம் செந்தில் தாக்கினாராம். பின்னா், மூவரும் சோ்ந்து கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம். இதில், பலத்த காயமடைந்த மகேந்திரன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீஸாா் செந்தில் உள்பட 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com