ஆட்டோக்களுக்கான எரிவாயு நிலையங்கள் அமைக்க வலியுறுத்தல்

ஆட்டோக்களுக்கான எரிவாயு நிலையங்களை அமைக்க வேண்டும் என ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் (ஏஐயுடியுசி) வலியுறுத்தியது.

ஆட்டோக்களுக்கான எரிவாயு நிலையங்களை அமைக்க வேண்டும் என ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் (ஏஐயுடியுசி) வலியுறுத்தியது.
அந்தச் சங்கத்தின் அமைப்புக் குழுக் கூட்டம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ். சிவக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மூத்த வழக்குரைஞர் பி. சங்கரன், எஸ்யுசிஐ கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் எஸ். லெனின்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மோட்டார் வாகனச் சட்டத்தை புதுச்சேரியில் தடை செய்ய வேண்டும். புது தில்லியைப் போல, ஆட்டோக்களுக்கான எரிவாயு நிலையங்களை புதுச்சேரியில் அமைக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு உடனடியாக நல வாரியம் அமைக்க வேண்டும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசுக் கூப்பன் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும். சட்ட விரோத இரு சக்கர வாகன நிலையங்களைத் தடை செய்ய வேண்டும். அனுமதியில்லாத ஆட்டோ ரிக்ஷாகளை தடை செய்ய வேண்டும். புதுச்சேரி வீதிகளில் ஒரு வழிப் பாதையை முறைப்படுத்த வேண்டும். விபத்துகளை ஏற்படுத்தும் தடுப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறை 
அதிகாரிகளின் அத்துமீறல்களைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com