காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தல்: கூட்டணி வேட்பாளர் குறித்து பாஜக அறிவிக்கும்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் எந்தக் கட்சி போட்டியிடும் என்பதை

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் எந்தக் கட்சி போட்டியிடும் என்பதை ஓரிரு நாள்களில் கட்சித் தலைமை அறிவிக்கும் என புதுவை மாநில பாஜக தெரிவித்தது.
புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் அக்டோபர் 21 -ஆம் தேதி நடைபெறுகிறது. 
இந்த நிலையில், காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், வேட்பாளரைத் தேர்வு செய்வதில் மாநில காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களிடம் திங்கள்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜகவில் எந்தக் கட்சி போட்டியிடுவது என்பது குறித்து கட்சியினர் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக கூட்டணியில் எந்தக் கட்சி போட்டியிடும் என்பதை ஓரிரு நாளில் கட்சித் தலைமை அறிவிக்கும் என பாஜக தெரிவித்தது.
இதுகுறித்து மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் எம்எல்ஏ புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர் திங்கள்கிழமை முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம். காமராஜ் நகர் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க கட்சித் தலைமையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து பாஜகவுக்கு தொகுதியை ஒதுக்குவது தொடர்பாக பேசி இருக்கிறோம். ஒருமித்த கருத்துடன் எந்தக் கட்சி போட்டியிடும் என்பதை பாஜக தலைமை ஓரிரு நாளில் அறிவிக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com