லாசுப்பேட்டை தொகுதி பாஜக சார்பில், லாசுப்பேட்டை கொல்லிமேடு மைதானத்தைத் தூய்மைப்படுத்தும் பணி அண்மையில் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்வை மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் எம்எல்ஏ தொடக்கி வைத்தார். மாநிலப் பொதுச் செயலர் ரவிச்சந்திரன், தூய்மை இந்தியா திட்டத்தின் மாநிலப் பொறுப்பாளர் அகிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திரளான இளைஞர்கள் பங்கேற்று மைதானத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றியதுடன், குப்பைகளைச் சேகரித்து அகற்றினர். இதையடுத்து, பிரதமர் மோடியின் 69 -ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், தொகுதி முழுவதும் 69 மரக்கன்றுகளை இளைஞர்கள் நட்டனர்.
இந்த நிகழ்வை மாநில பாஜக இளைஞரணிச் செயலர் வேலு ஏற்பாடு செய்திருந்தார்.