கவிஞர் தமிழ்ஒளி பிறந்த நாள் விழா

கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்த நாள் விழா புதுச்சேரி சாமிப்பிள்ளைதோட்டம் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்டது.


புதுச்சேரி: கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்த நாள் விழா புதுச்சேரி சாமிப்பிள்ளைதோட்டம் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர்  பாஸ்கர் தலைமை வகித்தார். 
விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரை 
நகரச் செயலர் நடராஜன், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநிலப் பொருளாளர் ராமச்சந்திரன், புதுவை 
மாநிலத் தலைவர் அரிகிருஷ்ணன், செயலர் உமாஅமர்நாத், பொருளாளர் கலியமூர்த்தி, நிர்வாகி வில்லியனூர் பழனி, மாநிலக் குழு உறுப்பினர் பாவலர் சண்முகசுந்தரம், மாதர் சங்கத்தின் மாநிலச் செயலர் சத்தியா, வாலிபர் சங்க நிர்வாகிகள் பிரபு, சுபாஷ் உள்ளிட்டோர்  தமிழ்ஒளியின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com