சுசி கம்யூனிஸ்ட் போட்டியிட முடிவு

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுசி கம்யூனிஸ்ட் போட்டியிட முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுசி கம்யூனிஸ்ட் போட்டியிட முடிவு செய்துள்ளது.
 சுசி கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநில அமைப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. , அமைப்புக் குழு உறுப்பினர் முத்து தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் அனவரதன், கட்சியின் மாநிலச் செயலர் காளிமுத்து லெனின் துரை, மாநிலக் குழு உறுப்பினர் ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல், காங்கிரஸ் கட்சியின் சுயலாபத்துக்காக திணிக்கப்பட்ட தேர்தல். இந்தத் தேர்தலில், புதுவை காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் வகையில் சுசி கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது, வேட்பாளராக கட்சியின் மாநிலச் செயலர் வழக்குரைஞர் காளிமுத்து லெனின் துரையை நிறுத்துவது என கட்சியின் மத்தியக் குழு ஒப்புதலுடன் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com