புதுச்சேரியில் உலக வெறிநாய் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கால்நடைகள் நலன் மற்றும் பிராணிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் இந்தப் பேரணி தொடங்கியது. வெறிநாய்க்கடி நோய் சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த இரு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியை பிப்டிக் தலைவர் இரா. சிவா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மருத்துவர் செல்வமுத்து, திமுக மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், விலங்குகள் நல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, நாய்க்கடி தொடர்பான விழிப்புணர்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.