என் மாடி, என் தோட்டம் என்ற குழுவின் முதலாம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி வேல்ராம்பேட்டையில் உள்ள வைஸ்மேன் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அந்தக் குழுவின் தலைவர் புருரவன் தலைமை வகித்தார். 50 உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழுவில் குடும்பத்துடன் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புதுவை அரசின் தோட்டக்கலை இணை இயக்குநர் வேதாச்சலம், துணை இயக்குநர் சண்முகவேல், காமராஜர் அறிவியல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் விஜயக்குமார், வேளாண் இணை இயக்குநர் சிவராமன், தோட்டக்கலை அதிகாரி வினோத்கண்ணா, பள்ளித் தாளாளர் சரோஜா, தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.
குழுவின் பொதுச் செயலர் சந்தானம் ஆண்டறிக்கை வாசித்தார். குழு உறுப்பினர்கள் தேவி, ராஜி ஆனந்த், நிகிலா, செந்தமிழ்ச்செல்வி இளங்கோ, மங்கையர்க்கரசி, ஜெயஸ்ரீ ராதாகிருஷ்ணன், வனஜா மணி ஆகியோர் தங்களது மாடித் தோட்ட அனுபவங்களையும், மானிய விலையில் கிடைத்த உரங்கள், இலவச விதைகள் குறித்தும் பேசினர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உரங்கள், இடு பொருள்கள் அடங்கிய ஒரு பையும், ரோஜா செடிகளும் இலவசமாக வழங்கப்பட்டன. குழுவின் பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.