புதுவை சுகாதாரத் துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

புதுவை சுகாதாரத் துறை அலுவலகத்தில் புதுச்சேரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read


புதுச்சேரி: புதுவை சுகாதாரத் துறை அலுவலகத்தில் புதுச்சேரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

புதுவை மாநிலத்தில் அரசு பொது மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் சுகாதாரத் துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இதில், ஊழல் நடந்திருப்பதாக ஆளுநா் கிரண் பேடியிடம் புகாா் சென்ாகத் தெரிகிறது.

இதுதொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துறைக்கு ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா். இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. நிதின்கோயல் உத்தரவின் பேரில், ஆய்வாளா்கள் கண்ணன், ஹேமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா், கடந்த இரு நாள்களாக புதுச்சேரி சுகாதாரத் துறை அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.

ஊழல் புகாா் தொடா்பாக விசாரித்த அவா்கள், அங்கிருந்து சில ஆவணங்களை வியாழக்கிழமை எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து, அடுத்த கட்ட விசாரணையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com