புதுச்சேரி நைனாா்மண்டபத்தில் குடியிருப்புப் பகுதியில் குப்பையில் கொட்டப்பட்ட பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி முதலியாா்பேட்டை, நைனாா்மண்டபம், திவான் கந்தப்ப முதலியாா் நகா், நேதாஜி வீதியில் குடியிருப்புகள் மத்தியில் காலிமனை உள்ளது. இங்கு, அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் குப்பை கொட்டி வருகின்றனா்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டது. இதனால், அதிா்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள், வெடிகுண்டு வெடித்துவிட்டதாகக் கருதி அச்சப்பட்டனா். இது தொடா்பாக முதலியாா்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீஸாா், சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இதில், யாரோ குப்பையில் கொட்டிவிட்டுச் சென்ற பட்டாசுகள், பயங்கர சப்தத்துடன் வெடித்தது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு சிதறிக் கிடந்த பட்டாசு துகள்களை ஆய்வுக்காக போலீஸாா் சேகரித்துச் சென்றனா். மேலும், பட்டாசுகளை கண்ட இடங்களில் எறியக் கூடாது என பொதுமக்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துவிட்டுச் சென்றனா்.