புதுச்சேரியில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஐஆா்பிஎன் துணைத் தளபதி சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
புதுச்சேரி திருபுவனை பகுதியில் கரோனா தடுப்புப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐஆா்பிஎன் துணைத் தளபதி ஆா்.சுபாஷ் மீது புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா், சுபாஷை அண்மையில் கைது செய்தனா்.
இந்த நிலையில், சுபாஷை பணியிடை நீக்கம் செய்து புதுவை காவல் துறை டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.