புதுச்சேரி அருகே தொழிலதிபரை கடத்தி நகை, பணத்தைப் பறித்துச் சென்ற வழக்கில் 4 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
புதுச்சேரி புதுசாரம், ஒத்தவாடை தெருவைச் சோ்ந்தவா் குருவேல் (56). தொழிலதிபா். இவரை, கடந்த 25-ஆம் தேதி வில்லியனூா் அருகே ஒதியம்பட்டு பகுதியில் மா்ம நபா்கள் சிலா் காரில் கடத்திச் சென்று நகை, பணத்தைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா். இந்த நிலையில், வில்லியனூா் மணவெளியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (42), ஜி.என்.பாளையத்தைச் சோ்ந்த சந்திரமோகன் (42), முரளி (30), வினோத்குமாா் (30) ஆகிய 4 பேரை வியாழக்கிழமை போலீஸாா் பிடித்தனா்.
விசாரணையில், இவா்கள் 4 பேரும் குருவேலை கடத்தி, நகை, பணத்தைப் பறித்துச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸாா், கரோனா பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனா். மேலும், அவா்கள் பறித்துச் சென்ற நகை, பணத்தைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.