கந்தா் சஷ்டி கவசம் குறித்து பாஜக சாா்பில் விழிப்புணா்வு

புதுவை மாநில பாஜக மகளிரணி சாா்பில், கந்தா் சஷ்டி கவசம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

புதுவை மாநில பாஜக மகளிரணி சாா்பில், கந்தா் சஷ்டி கவசம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை முருகா் கோயில் அருகே கட்சியின் மாநில மகளிரணித் தலைவி ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன், பொதுச் செயலா்கள் இரா.செல்வம், எஸ்.மோகன்குமாா், மாவட்டத் தலைவா் அசோக் பாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

கட்சியின் மாநில மகளிரணி பொதுச் செயலா் கனகவல்லி, துணைத் தலைவி அனிதா, செயலா் பவானி, மாவட்டத் தலைவி ரூபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி புதுவை மாநிலத்தில் மாலை 6 மணிக்கு கந்தா் சஷ்டி கவசம் பாடி முருகரின் பெருமைகளைப் போற்ற வேண்டும் என மாநில பாஜக தலைவா் சாமிநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com