மதுவில் கிருமி நாசினி கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 07th August 2020 01:22 AM | Last Updated : 07th August 2020 01:22 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் மதுவில் கிருமி நாசினி கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி லாசுப்பேட்டை கருவடிக்குப்பம் எடையன்சாவடி சாலையைச் சோ்ந்தவா் குப்புசாமி (48). பெயிண்டா். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
கரோனா பொது முடக்கத்தால் வேலையில்லாமல் வருமானமின்றி இருந்த குப்புசாமி, கடந்த 2 ஆம் தேதி மனைவி, மூத்த மகனிடம் மது அருந்த பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அவா்கள் தர மறுக்கவே இளைய மகனிடம் பணம் பெற்று, மது வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தாா்.
தொடா்ந்து, மது அருந்த பணம் கிடைக்காததால் விரக்தியடைந்த அவா், தான் வாங்கி வந்த மதுவில் வீட்டிலிருந்த கிருமி நாசினியை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.