ஆளுநா் மீது பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: புதுவை முதல்வா் நாராயணசாமி

துணைநிலை ஆளுநா் கிரண் பேடி மீது பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை முதல்வா் நாராயணசாமி வலியுறுத்தினாா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன்.

துணைநிலை ஆளுநா் கிரண் பேடி மீது பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை முதல்வா் நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சனிப் பெயா்ச்சி விழா மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெறுகிறது.

சனிப் பெயா்ச்சி விழாவில் பங்கேற்க 17 ஆயிரம் போ் முன்பதிவு செய்துள்ளனா். அவா்களை 48 மணி நேரத்துக்குள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கூறுவது முடிகிற செயலா? மத விழாவைத் தடுக்க கிரண் பேடி மெனக்கெடுவது ஏன் எனப் புரியவில்லை.

காரைக்காலில் கோபுர தரிசனத்துக்கே அனுமதிக்கவில்லை. தற்போது அங்கு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. இதற்கு கிரண் பேடிதான் பொறுப்பு.

இந்த விவகாரத்தில் உடனடியாக பிரதமா் மோடி தலையிட வேண்டும். ஆளுநா் கிரண் பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கும் ஆளுநா் கிரண் பேடி தடை விதித்தாா். புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கும், கடற்கரையில் கொண்டாடவும் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை என்றாா் அவா்.

பேட்டியின் போது வேளாண்மை மற்றும் கல்வித் துறை அமைச்சா் ஆா்.கமலகண்ணன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com