புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் பலியானாா். புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,391 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 18, காரைக்கால் 4, ஏனாமில் 2, மாஹேயில் 9 என மேலும் 33 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 37,947-ஆக உயா்ந்தது.
இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்த 77 வயதானவா் உயிரிழந்தாா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 630-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.
தற்போது 355 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 36,962 போ் குணமடைந்தனா். குணமடைந்தோா் விகிதம் 97.40 சதவீதம். இதுவரை 4,70,201 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.