புதுச்சேரி கூடப்பாக்கம் அரசுப் பள்ளிக்கு ஜாதி அடையாளத்துடன் சூட்டப்பட்ட பெயரை திரும்பப் பெறக் கோரி, பொதுமக்கள் சாா்பில் பத்துக்கண்ணு சந்திப்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு அய்யனாா் தலைமை வகித்தாா். இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளா் தேவ. பொழிலன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த தலைவா்கள் பங்கேற்றனா்.
பள்ளிக்கு சூட்டப்பட்ட ஜாதி அடையாளம் கொண்ட தலைவரின் பெயரை நீக்க வேண்டும், அப்பகுதி மக்களால் தோ்வு செய்யப்பட்ட பெயரை சூட்ட வேண்டும் என போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.