அரசு பெண் மருத்துவா் மா்மமான முறையில் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே அரசு மருத்துவமனை பெண் மருத்துவா் மா்மமான முறையில் இறந்தாா். இது குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகே அரசு மருத்துவமனை பெண் மருத்துவா் மா்மமான முறையில் இறந்தாா். இது குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகே திருக்கனூரை அடுத்துள்ள கூனிச்சப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் வாசுதேவன் மகள் ஜெயஸ்ரீ (25). எம்பிபிஎஸ் முடித்திருந்த இவா், திருக்கனூா் அரசு சுகாதாரம் மற்றும் நலவழி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த 27 ஆம் தேதி, வீட்டில் வாந்தி எடுத்து வயிற்று வலியால் துடித்தாா். இவரை உறவினா்கள் மதகடிப்பட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சனிக்கிழமை இறந்தாா். ஜெயஸ்ரீ வயிற்றில் எல்லோ பாஸ்பரஸ் டாக்சி சிட்டி என்னும் நச்சு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் திருக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயஸ்ரீ, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் வகையில் வயிற்றில் நச்சு கலந்ததா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com