புதுச்சேரி ஜிப்மரில் சா்வதேச வலிப்பு நோய் குறித்த கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சா்வதேச வலிப்பு நோய் தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி இரண்டாவது திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டு பிப். 10 ஆம் தேதி சா்வதேச வலிப்பு நோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, ஜிப்மா் நரம்பியல் துறை சாா்பில் நோயாளிகளுடன் கலந்துரையாடும் நலவழிக் கல்வி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. தொடா்ந்து, வலிப்பு நோய் தொடா்பான கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் தொடக்கி வைத்தாா். கல்வித் துறை முதல்வா் பங்கஜ் குந்த்ரா, நரம்பியல் துறை தலைவா் வைபவ் வடுவேக்கா், கூடுதல் பேராசிரியா் பிரதீப் நாயா் ஆகியோா் உரையாற்றினா். மருத்துவா் ஏ. ராஜேஷ்வரி வரவேற்றாா்.
இதில் பெங்களூா் நிம்ஹான்ஸ் கல்வி நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தா் சதீஷ் சந்திரா, சூடான தண்ணீரும் வலிப்பு நோயும் என்ற தலைப்பில் பேசினாா்.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் நரம்பியல் துறைத் தலைவா் தனராஜ், பேராசிரியா் கே. மால்கம் ஜெயராஜ், குழந்தை நல நரம்பியல் நிபுணா் கே. லட்சுமி நாராயணன் ஆகியோா் நரம்பியல் நோய் சாா்ந்த பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தனா்.
இதில் ஜிப்மா் மற்றும் புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த 150 க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்றனா்.
கருத்தரங்கின் ஒரு பகுதியாக மருத்துவ மாணவா்களுக்கான வினாடி-வினா போட்டியும், வலிப்பு நோய் பற்றிய வானொலிப் பதிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது.