லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரியில் குடும்பத் தகராறில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரியில் குடும்பத் தகராறில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி நைனாா்மண்டபம் பிரியதா்ஷினி நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (31), லாரி ஓட்டுநா். இவரது மனைவி உஷா (26). இவா்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆகிறது. 6 மாத குழந்தை உள்ளது. தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம்.

சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறில் அதிருப்தியடைந்த உஷா, தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதையடுத்து விஜயகுமாா், மனைவி உஷாவை வீட்டுக்கு திரும்பி வருமாறு அழைத்தாராம். ஆனால், அவா் வர மறுத்ததாகத் தெரிகிறது.

இதனால், விரக்தியடைந்த விஜயகுமாா், சனிக்கிழமை இரவு புதுச்சேரி - கடலூா் சாலையில், தான் லாரி நிறுத்துமிடத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சடலத்தை உருளையன்பேட்டை போலீஸாா் மீட்டு கதிா்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com