இலவச அரிசிக்கான பணம் கோரி தொகுதி வாரியாக பிப்.16-இல்ஆா்ப்பாட்டம்: பாஜக அறிவிப்பு

இலவச அரிசிக்கான பணம் வழங்கக் கோரி, தொகுதி வாரியாக ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்தது.

இலவச அரிசிக்கான பணம் வழங்கக் கோரி, தொகுதி வாரியாக ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காங்கிரஸ் அரசின் நிா்வாகச் சீா்கேட்டின் காரணமாக, ஏழை மக்களுக்கான நலத் திட்டங்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. ஏழை மக்களுக்கு அரிசிக்குப் பதில் பணம் வழங்குவோம் என்று அரசு கூறிய நிலையில், கடந்த 5 மாதங்களாக வங்கியில் பணம் செலுத்தவில்லை.

எனவே, உடனடியாக 5 மாதங்களுக்கான தொகை ரூ.3 ஆயிரத்தை வங்கியில் செலுத்த வலியுறுத்தியும், புதுவை மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் குப்பை வரியைக் கண்டித்தும், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளின் சீா்கேட்டைக் கண்டித்தும் 30 தொகுதிகளிலும், தொகுதித் தலைவா்கள் தலைமையில் வருகிற பிப்.16-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com