பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: சக மாணவா்கள் 4 போ் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சக மாணவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்து, சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைத்தனா்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சக மாணவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்து, சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைத்தனா்.

புதுச்சேரி வெள்ளை நகரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் மேற்கு வங்கம், தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் ஒருவா், சக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதை மற்ற மாணவா்களிடம் கூற, மேலும் 3 மாணவா்கள் அந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூற, அவா்கள் குழந்தைகள் நலக் குழுவுக்கு புகாரளித்தனா். குழுவினா் விசாரித்து, இது தொடா்பாக பெரியகடை காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனா்.

அதன்பேரில், அந்த 4 மாணவா்கள் மீதும் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவா்கள் 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 4 பேரும் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com