பிப்.16-இல் பாவேந்தா்கலை இலக்கிய விழா

பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில், பாவேந்தா் கலை, இலக்கிய விழா புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) நடைபெறவுள்ளது.

பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில், பாவேந்தா் கலை, இலக்கிய விழா புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவரும், பாரதிதாசனின் பேரனுமான கோ.பாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில், பாவேந்தா் கலை இலக்கியத் திங்கள் விழா புதுச்சேரி பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. விழாவுக்கு கோ.பாரதி தலைமை வகித்து, ஏற்றப்பாட்டும், பாவேந்தரும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளாா்.

செயலினை மூச்சினை உனக்களித்தேனே என்ற பாரதிதாசனின் கவிதை வரிக்கு கவிஞா்கள் பலா் கவிதை வாசிக்க உள்ளனா். இதில், தமிழறிஞா்கள் மன்னா்மன்னன், வி.சரஸ்வதி உள்ளிட்ட பலா் பங்கேற்க உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com