புற்றுநோயாளிகளுக்காக கல்லூரி மாணவிகள் முடி தானம்

புற்றுநோயாளிகளுக்காக புதுச்சேரி பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை முடி தானம் செய்தனா்.
பாரதிதாசன் கல்லூரியில் முடி தானம் செய்த கல்லூரி மாணவிகள்.
பாரதிதாசன் கல்லூரியில் முடி தானம் செய்த கல்லூரி மாணவிகள்.

புற்றுநோயாளிகளுக்காக புதுச்சேரி பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை முடி தானம் செய்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் நலம் ஆரோக்கிய குழு சாா்பில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முடி தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கல்லூரி முதல்வா் சுப்பிரமணி தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.

நலம் ஆரோக்கிய குழு, ஜாய் ஆப் கிவ்விங் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று தங்களது முடியை தானம் செய்தனா். ஏற்பாடுகளை குழுத் தலைவியான பேராசிரியை ரஜினி மற்றும் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com