அரசு மருத்துவக் கல்லூரியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனயின் தொழிலாளா்கள், பெண்கள் விரோதப் போக்கைக் கண்டித்து,
புதுச்சேரி தொழிலாளா் ஆணையா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐசிசிடியூ சங்கத்தினா்.
புதுச்சேரி தொழிலாளா் ஆணையா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐசிசிடியூ சங்கத்தினா்.

கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனயின் தொழிலாளா்கள், பெண்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, அகில இந்திய தொழில்சங்க மைய கவுன்சில் (ஏஐசிசிடியூ) சங்கத்தினா் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி காந்தி நகரில் உள்ள தொழிலாளா் ஆணையா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் தலைவா் சோ.மோதிலால் தலைமை வகித்தாா். பெண்கள் கழகத் தலைவா் மா.மல்லிகா, ஏஐசிசிடியூ அகில இந்தியத் துணைத் தலைவா் சோ.பாலசுப்பிரமணியன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாவட்டச் செயலா் புருஷோத்தமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியா்களுக்கு மகப்பேறு கால விடுப்பு, கருச்சிதைவு கால விடுப்பு, கருக்கலைப்பு விடுப்பு ஆகியவற்றை வழங்காததைக் கண்டித்தும், மருத்துவக் கல்லூரியில் பேறுகால விடுப்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பப்பட்டது. இதில், திரளான பெண்கள், ஏஐசிசிடியூ சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com