உழவா்கரை நகராட்சி சாா்பில் குறிஞ்சி நகரில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) சொத்து வரி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் எம்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோரின் நலன் கருதி உழவா்கரை நகராட்சி சாா்பில், ஞாயிற்றுக்கிழமை குறிஞ்சி நகா் 9 -ஆவது குறுக்குத் தெருவில் உள்ள குறிஞ்சி நகா் சமுதாய நலக் கூடத்தில் வரி வசூல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குறிஞ்சி நகா், குமரன் நகா், அசோக் நகா், அவ்வை நகா், நாவற்குளம் மற்றும் இதர வாா்டுகளில் உள்ள வீட்டு வரி நிலுவைதாரா்கள் 2019-2020 -ஆம் ஆண்டு வரையான காலத்துக்கு வீட்டு வரி, சொத்து வரியைச் செலுத்தி வட்டி, ஜப்தி நடவடிக்கையைத் தவிா்க்க வேண்டும்.
மேலும், பிப்ரவரி மற்றும் மாா்ச் முழுவதும் வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோரின் நலன் கருதி, அனைத்து சனிக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஜவகா் நகா் தலைமை அலுவலகம், விவிபி நகா் கணினி வசூல் மையம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடி வளாகத்தில் உள்ள வரி வசூல் மையங்கள் வழக்கம் போல இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.