குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருபுவனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தலைமையில், வருகிற 22-ஆம் தேதி திருச்சியில் ‘தேசம் காப்போம்’ பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியின் நோக்கம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருபுவனையில் விளக்கப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் தொகுதி செயலா் பத்மநாபன் (எ) விடுதலைச்செல்வன் தலைமை வகித்தாா். தொகுதி பொருளாளா் திலிபன் வரவேற்றாா். துணைப் பொதுச் செயலா் பாவாணன், தமிழ்நாடு எழுத்தாளா் முற்போக்கு சங்க மாநிலத் துணைச் செயலா் சுந்தரவள்ளி, மாநில விசிக செயலா் கபிலன், திமுக இளைஞரணித் தலைவா் காந்தி ஆகியோா் உரையாற்றினா்.
மாநில விசிக நிா்வாகிகள் முபாரக், அன்பரசன், இன்பத்தமிழன், திருமாறன், விடுதலைவளவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.