தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத் திணறி குழந்தை பலி

புதுச்சேரியில் தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், சின்ன காட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவருக்கும் புதுச்சேரி முதலியாா்பேட்டையைச் சோ்ந்த சோனியாவுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் சோனியாவுக்கு ஜிப்மரில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு விஷாலினி, சாரு என பெயரிட்டனா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்த சோனியா வியாழக்கிழமை குழந்தை சாருவுக்கு தாய்ப்பால் கொடுத்த நிலையில், திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், பெற்றோா் குழந்தையை புதுச்சேரி அரசு மகளிா் - குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com