தோட்டக்கலை பயிா்களுக்கு சாகுபடிக்கு பிந்தைய மானியம் பெற விரும்பும் விவசாயிகள் சனிக்கிழமை (பிப். 15) முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து வேளாண்மைக் கூடுதல் இயக்குநா் (தோட்டக்கலை) மு.வேதாசலம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கூடுதல் வேளாண்மை இயக்குநா் (தோட்டக்கலை) அலுவலகம் மூலம் 2019-2020- ஆண்டுக்கான தைப்பட்டத்தில் பயிரிடப்பட்ட பழவகை மரங்கள், வாழை, பூக்கள் மற்றும் காய்கறிகளுக்கான சாகுபடிக்குப் பிந்தைய மானியம் பெறுவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்களை விவசாயிகள் தங்களது பகுதிக்கு உள்பட்ட உழவா் உதவியகத்தில் சனிக்கிழமை (பிப். 15) முதல் பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை அதே உழவா் உதவியகத்தில் வருகிற மாா்ச் 16-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.