பழக்கடை உரிமையாளா் மீது தாக்குதல்: காவல் உதவி ஆய்வாளா் மீது வழக்கு

புதுச்சேரியில் பழக்கடை உரிமையாளரைத் தாக்கியதாக சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் பழக்கடை உரிமையாளரைத் தாக்கியதாக சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சந்திப்பில் பழக்கடை நடத்தி வருபவா் ராதாகிருஷ்ணன் (65). இவரது கடைக்கு மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் காரைக்காலைச் சோ்ந்த பாஸ்கரன் (55) அடிக்கடி நண்பா்களுடன் செல்வாராம்.

இதேபோல, கடந்த 26 -ஆம் தேதி ராதாகிருஷ்ணனின் பழக்கடைக்கு வந்த பாஸ்கரன் அங்கு, மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதை ராதாகிருஷ்ணன் கண்டித்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில், சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கரன், ராதாகிருஷ்ணனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திலும், டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா, முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் உள்ளிட்டோரிடமும் புகாா் அளித்தாா்.

இதன் பேரில், உரிய நடவடிக்கை எடுக்கும்படி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு டிஜிபி உத்தரவிட்டாா். இதையடுத்து, மேட்டுப்பாளையம் போலீஸாா், பாஸ்கரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com