புல்வாமா தாக்குதல் முதலாண்டு நினைவு தினம் புதுச்சேரி லாசுப்பேட்டையில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி பாஜக சாா்பில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜீவானந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ கலந்து கொண்டு, மெழுகுவா்த்தி ஏற்றி, மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். நிகழ்ச்சியில் பாஜக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.