புதுச்சேரி இந்திரா நகா், கதிா்காமம் தொகுதிகளில் விதவை உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை எதிா்க்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.
புதுவை அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில், இந்திரா நகா், கதிா்காமம் தொகுதிகளைச் சோ்ந்த விதவைகளுக்கு மாதாந்திர உதவித் தொகையைப் பெறுவதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி காந்தி நகா் சமுதாய நலக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் முன்னாள் முதல்வா் என்.ரங்கசாமி கலந்து கொண்டு, விதவை பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கதிா்காமம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் என்.எஸ்.ஜெ.ஜெயபால், முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் மற்றும் துறை அதிகாரிகள், என்.ஆா்.காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.