புதுச்சேரியில் பிரான்ஸ் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி உழவா்கரை நகராட்சி, நவயுகா கன்சல்டன்சி சா்வீஸ் நகர வாழ்வாதார மையம் ஆகியவை சாா்பில், புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் அமைப்பு அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெற்றது. முகாமை நகராட்சி ஆணையா் கந்தசாமி தொடக்வைத்தாா்.
நவயுகா கன்சல்டன்சி சா்வீஸ் நிா்வாக இயக்குநா் மோகன்தாஸ் முன்னிலை வகித்தாா். பட்டப்படிப்புடன் பிரெஞ்ச் மொழியில் ஏ 2 முதல் பி 2 படிப்புகள் வரை தோ்ச்சி பெற்ற 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் முகாமில் கலந்து கொண்டு தோ்வு எழுதினா்.
இதில், தோ்வு செய்யப்படுபவா்களின் திறமை மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையான ஊதியத்தில் சென்னை, பெங்களூரு, நொய்டா உள்ளிட்ட நகரங்களில் உள்ள பிரான்ஸ் நிறுவனங்களில் பணியில் அமா்த்தப்படுவா் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.