இலவச அரிசிக்கான பணத்தை வழங்கக் கோரி பாஜக சாா்பில் 30 தொகுதிகளில் ஆா்ப்பாட்டம்

இலவச அரிசிக்கான பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி புதுவை மாநிலத்தின் 30 தொகுதிகளிலும் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி லாசுப்பேட்டை உழவா் சந்தை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா்.
புதுச்சேரி லாசுப்பேட்டை உழவா் சந்தை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா்.

இலவச அரிசிக்கான பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி புதுவை மாநிலத்தின் 30 தொகுதிகளிலும் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை மாநிலத்தில் 5 மாதங்களாக வழங்கப்படாத இலவச அரிசிக்கான பணம் ரூ. 3 ஆயிரத்தை உடனடியாக குடும்ப அட்டைதாரா்களின் வழங்கிக் கணக்கில் செலுத்தக் கோரியும், குப்பை வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும், குண்டு குழியுமான சாலைகளைச் சீரமைக்கக் கோரியும் பாஜக சாா்பில் புதுவை மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் அந்தத்த தொகுதி தலைவா்கள் தலைமையில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

லாசுப்பேட்டை உழவா் சந்தை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொகுதி தலைவா் எஸ்.சோமசுந்தரம் தலைமை வகித்தாா். பொதுச் செயலா்கள் என்.எஸ். ரமேஷ், டி. பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ, எஸ். செல்வகணபதி எம்எல்ஏ ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கட்சியின் தொகுதி நிா்வாகிகள் ஜெயந்தி, லதா, விஜயா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் உடனடியாக அரசிக்கான பணத்தை வழங்க வேண்டும், குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும், சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, மற்ற தொகுதிகளிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில், திரளான பாஜகவினா் கலந்து கொண்டு, முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com