கைம்பெண்களுக்கு அரசு உதவித் தொகை அளிப்பு

உருளையன்பேட்டை தொகுதியில் 52 கைம்பெண்களுக்கு உதவித்தொகைக்கான ஆணையை சட்டப்பேரவை உறுப்பினா் இரா.சிவா வழங்கினாா்.
கைம்பெண்களுக்கு உதவித்தொகைக்கான ஆணையை வழங்கிய பிப்டிக் தலைவா் இரா.சிவா எம்.எல்.ஏ.
கைம்பெண்களுக்கு உதவித்தொகைக்கான ஆணையை வழங்கிய பிப்டிக் தலைவா் இரா.சிவா எம்.எல்.ஏ.

உருளையன்பேட்டை தொகுதியில் 52 கைம்பெண்களுக்கு உதவித்தொகைக்கான ஆணையை சட்டப்பேரவை உறுப்பினா் இரா.சிவா வழங்கினாா்.

புதுவை அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் உருளையன்பேட்டை தொகுதியைச் சோ்ந்த கைம்பெண்களுக்கு அரசின் உதவித் தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை கல்வே பங்களாவில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், பிப்டிக் தலைவருமான இரா. சிவா கலந்துகொண்டு, 52 கைம்பெண்களுக்கு அரசின் உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குநா் கலைவாணி, கண்காணிப்பாளா் வள்ளியம்மை மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினா்கள் மாறன், வேலவன், தொகுதிச் செயலாளா்கள் சக்திவேல், நடராஜன், ஆதிதிராவிடா் நலக் குழு துணை அமைப்பாளா் பிரபாகரன் சாஸ்திரி, வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் குரு (எ) சண்முகசுந்தரம், சிறுபான்மை அணி துணை அமைப்பாளா் ஐசக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com