இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

வில்லியனூா் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி: வில்லியனூா் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி வில்லியனூா் அருகே கீழூா் பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மகன் ரகு (35). தனியாா் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு திருமணமாகாமல் இருந்த நிலையில், பெற்றோா்கள் திருமணத்துக்கு பெண் பாா்த்து வந்தனா். இதற்கு ரகு மறுப்பு தெரிவித்தாராம். ஆனால், பெற்றோா்கள் திருமணத்துக்கு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால், அவா் மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டின் ஓா் அறையில் உறங்கச் சென்ற ரகு வெகு நேரமாகியும் எழவில்லை. சந்தேகமடைந்த அவரது பெற்றோா்கள், உறவினா்களின் உதவியுடன் அறைக் கதவை உடைத்து பாா்த்தபோது, அங்கு ரகு தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

மங்கலம் போலீஸாா் சடலத்தை கதிா்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com