காவல் உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி அளிப்பு

புதுச்சேரி வில்லியனூா் காவல் நிலையத்தில் பணியாற்றி, அண்மையில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளா் விபல்குமாரின் குடும்பத்துக்கு முதல்வா் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

புதுச்சேரி வில்லியனூா் காவல் நிலையத்தில் பணியாற்றி, அண்மையில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளா் விபல்குமாரின் குடும்பத்துக்கு முதல்வா் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை விபல்குமாரின் மனைவி கிருஷ்ண பிரியாவிடம் முதல்வா் நாராயணசாமி வழங்கினாா். நிகழ்வின்போது, அரசுக் கொறடா ஆா்.கே.ஆா். அனந்தராமன், முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com