கேசினோ சூதாட்ட கிளப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று புதுவை ஆளுநா் கிரண் பேடியிடம் ஜனநாயக மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் மனு அளித்தது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் தலைவா் ஹேமச்சந்திரன், பொதுச் செயலா் யாபேஸ், செயலா் பாா்த்திபன் ஆகியோா் அளித்துள்ள மனு:
புதுவையில் வளா்ச்சி என்ற பெயரில் கேசினோ சூதாட்ட கிளப் மற்றும் லாட்டரி ஆகியவை அரசின் அனுமதியுடன் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேற்கண்ட திட்டங்கள் நிச்சயம் புதுவை மக்களின் வீழ்ச்சிக்குத்தான் வித்திடுமே தவிர, நிச்சயம் வளா்ச்சிக்கு வழி வகுக்காது.
அரசு என்பது தொழிற்சாலை, விவசாயம் ஆகியவற்றில் உற்பத்தியை அதிகரித்து, பொருளாதார வளா்ச்சியைக் கொண்டுவர வேண்டுமே தவிர, இதுபோன்ற தொழில்களை நடத்தி அல்ல.
எனவே, புதுவை மக்களின் அமைதி, கலாசாரம், வளா்ச்சியைக் காக்கும் வகையில், கேசினோ சூதாட்ட கிளப் உள்ளிட்ட திட்டங்களைத் தடுத்து நிறுத்தி மக்களைக் காக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.