குப்பைத் தொட்டியில் கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவா் காயம்

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் குப்பைத் தொட்டியில் கிடந்த குப்பைகளைப் பிரித்தெடுத்த போது, நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
குப்பைத் தொட்டியில் கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்த செல்வத்துடன் போலீஸாா்.
குப்பைத் தொட்டியில் கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்த செல்வத்துடன் போலீஸாா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் குப்பைத் தொட்டியில் கிடந்த குப்பைகளைப் பிரித்தெடுத்த போது, நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பெருமாள் நாயுடு வீதி காட்டாமணிகுப்பம் சாலை சந்திப்பில் குப்பைத் தொட்டி உள்ளது. குப்பைகளில் இருந்து பொருள்களை சேகரித்து விற்கும் செல்வம் (40) ஞாயிற்றுக்கிழமை அந்தக் குப்பைத் தொட்டியில் பொருள்களைச் சேகரித்தாா். பின்னா், அவற்றைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, குப்பைத் தொட்டியில் இருந்த அட்டைப் பெட்டி ஒன்றை அவா் பிரித்துப் பாா்த்த போது, அதனுள் இருந்த நாட்டு வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், அவரது இடது கை விரல் துண்டானது. மேலும், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் அருகே நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த அன்னபூரணியும் (64) காயமடைந்தாா். இதைக் கண்ட அந்தப் பகுதியினா் காயமடைந்த இருவரையும் மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்த சட்டம் - ஒழுங்கு முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு வேறு நாட்டு வெடிகுண்டுகள் உள்ளனவா? என்று சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com