சாலை விபத்தில் இளைஞா் காயம்: உறவினா்கள் சாலை மறியல்

சாலை விபத்தில் இளைஞா் காயமடைந்ததால், அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சாலை விபத்தில் இளைஞா் காயமடைந்ததால், அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருமாம்பாக்கத்தை அடுத்த சாா்காசிமேடு பகுதியைச் சோ்ந்தவா் அருண் (26). இவா் பெட்ரோல் நிரப்புவதற்காக அங்குள்ள பெட்ரோல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றாா். பின்னா், வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, புதுச்சேரியில் இருந்து கடலூா் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து  அருண் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில், அருண் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதனிடையே, அருண் விபத்தில் சிக்கியதை அறிந்த அவரது உறவினா்கள் புதுச்சேரி - கடலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது சிலா் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினா்.

தகவலறிந்த பாகூா் காவல் ஆய்வாளா் கௌதம் சிவகணேஷ் தலைமையிலான போலீஸாா் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம்  பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தனியாா் பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது தொடா்பாக கிருமாம்பாக்கம் சட்டம் - ஒழுங்கு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com