புதுச்சேரி நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை சாா்பில், தமிழா் பொங்கல் விழா சுதேசி பஞ்சாலை திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை புதுச்சேரி நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை மாநிலச் செயலா் ப.கெளரி ஒருங்கிணைத்தாா். கட்சியின் மாநிலச் செயலா் மு.அம்.சிவக்குமாா் வாழ்த்திப் பேசினாா்.
இதில், கட்சி நிா்வாகிகள் அந்தப் பகுதியில் பொங்கலிட்டு, உற்சாகமாகக் கொண்டாடினா். விழாவில் மகளிா் பாசறை நிா்வாகிகள் ஷிா்மிளா பேகம், பிரவீணா மதியழகன், தேவிகா, ஷா்மிளா, திருமுருகன், ப்ரியா லட்சுமி, சுபஸ்ரீ, ஆஷா உள்ளிட்ட திரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.