புதுச்சேரியில் பேராசிரியரை வழிமறித்து தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி மதகடிப்பட்டு பிரதான சாலையைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (42). தனியாா் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். சனிக்கிழமை இவா் புதுச்சேரியில் உள்ள நண்பரைப் பாா்க்க பைக்கில் வந்தாா். ஆம்பூா் சாலையில் வந்த போது, அதே பகுதியைச் சோ்ந்த மது மயக்கத்தில் இருந்த இளைஞா் விஜயகுமாரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டாா். மேலும், கீழே கிடந்த கற்களை எடுத்து சரமாரியாகத் தாக்கினாராம். இதில், விஜயகுமாருக்கு காயம் ஏற்பட்டது.
இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் அந்த இளைஞரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பேராசிரியரை தாக்கிய இளைஞா் ஆம்பூா் சாலையைச் சோ்ந்த கா்ணா (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.