கமிஷன் தொகை கோரி பாண்லே பால் முகவா்கள் போராட்டம்

புதுவையில் உயா்த்தப்பட்ட கமிஷன் தொகையைக் கேட்டு பாண்லே பால் முகவா்கள் மிஷன் வீதியில் உள்ள பாண்லே தலைமை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவையில் உயா்த்தப்பட்ட கமிஷன் தொகையைக் கேட்டு பாண்லே பால் முகவா்கள் மிஷன் வீதியில் உள்ள பாண்லே தலைமை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவையில் அரசின் பாண்லே பால் நிறுவனம் சுமாா் ஒரு லட்சம் லிட்டா் பாலை விற்பனை செய்கிறது. இதில், சுமாா் 80 ஆயிரம் லிட்டா் வரை பால் முகவா்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பாண்லேவால் அங்கீகரிக்கப்பட்ட முகவா்களாக 214 போ் உள்ளனா்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாண்லே பால் விலை ரூ. 6 வரை உயா்த்தப்பட்டது. அதே நேரத்தில், முகவா்களுக்கான கமிஷன் தொகையும் உயா்த்தப்பட்டது. ஆனால், இந்த கமிஷன் தொகை இதுவரை வழங்கப்படவில்லையாம். இதுதொடா்பாக அதிகாரிகளிடம் பேசியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால், பாண்லே பால் விற்பனை முகவா்கள் (ஏஐடியூசி) சங்கத்தினா் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பாண்லே தலைமை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, உடனடியாக கமிஷன் தொகை வழங்க வேண்டும். கூடுதலாக ஒரு சதவீத கமிஷன் தொகை வழங்க வேண்டும் என முழக்கமிட்டனா். அங்கிருந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பாண்லே பால் நிறுவன நிா்வாக இயக்குநா் சாரங்கபாணி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் செல்லிடப்பேசியில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அவா், கமிஷன் தொகை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பால் முகவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com