உப்பளம் தொகுதி மக்களுக்கு அதிமுக எம்.எல்.ஏ. ஆ.அன்பழகன், இலவசமாக கரும்புகளை வழங்கினாா்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தொகுதி எம்.எல்.ஏ.வும், அதிமுக பேரவைக் குழுத் தலைவருமான அன்பழகன், தொகுதியில் உள்ள 12 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா இரண்டு கரும்புகள் வீதம் இலவசமாக வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியின்போது, அதிமுக தொகுதி செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளா் பாப்புசாமி, வாா்டு செயலாளா் கிருஷ்ணராஜ், ஜெ. பேரவை துணை செயலாளா் சாா்லஸ் உள்பட பலா் உடனிருந்தனா்.