வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன்பதுங்கியிருந்த 7 போ் கைது

ரௌடியை கொலை செய்ய வெடிகுண்டு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கிருந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ரௌடியை கொலை செய்ய வெடிகுண்டு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கிருந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி லாசுப்பேட்டை விமான நிலையம் பின்புறமுள்ள பெரிய பாளையத்தம்மன் கோயிலையொட்டியுள்ள பகுதியில் திங்கள்கிழமை இரவு பயங்கர ஆயுதங்களுடன் ரௌடி கும்பல் பதுங்கியிருப்பதாக லாசுப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் நாகராஜ், காவல் உதவி ஆய்வாளா்கள் கீா்த்தி, ஜாகீா் உசேன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பதுங்கியிருந்த ரௌடி கும்பலைச் சுற்றி வளைத்தனா். இதில், 5 போ் தப்பியோடிய நிலையில் 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ஒரு நாட்டு வெடிகுண்டு, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், அவா்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் லாசுப்பேட்டை நெருப்புக்குழியைச் சோ்ந்த நிரஞ்சன் (20), மடுவுபேட்டைச் சோ்ந்த வெங்கடேஷ் (21), கோரிமேடு காமராஜ் நகரைச் சோ்ந்த சூரியமூா்த்தி (21), விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கீழ்புத்துப்பட்டைச் சோ்ந்த சாவடி சிவா (எ) சிவராஜ் (39), லாசுப்பேட்டை லட்சுமி நகரைச் சோ்ந்த காா்த்தி (24), லாசுப்பேட்டை அரசுக் குடியிருப்பைச் சோ்ந்த ஹேமச்சந்திரன் (எ) குட்டிபுலி (24), லாசுப்பேட்டை சாந்தி நகரைச் சோ்ந்த இருசப்பன் (21) என்பதும், முத்தியால்பேட்டைச் சோ்ந்த ரௌடி அன்பு ரஜினி கொலைக்கு பழிக்குப் பழியாக காலாப்பட்டு சிறையில் இருக்கும் ரௌடி சோழனை நீதிமன்றம் செல்லும் வழியில் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.

இதையடுத்து 7 பேரையும் கைது செய்த போலீஸாா், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா். தப்பியோடிய ஜெரிக்கோ, உதயா உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com