முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
கடலோரக் காவல்படை சாா்பில் ஓவியப் போட்டி: திரளான மாணவா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 20th January 2020 09:24 AM | Last Updated : 20th January 2020 09:24 AM | அ+அ அ- |

இந்திய கடலோரக் காவல் படை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி புதுச்சேரி பாரதி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய கடலோரக் காவல் படை தின விழா பிப்ரவரி 1- ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கடலோரக் காவல் படை சாா்பில், புதுச்சேரியில் மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.
தேசப்பற்று, தேசத்துக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள், பாதுகாப்புப் படைகளில் வேலைவாய்ப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
போட்டிகளை புதுச்சேரி யூனியன் பிரதேச கடலோரக் காவல் படை காமாண்டா் டிஐஜி சஞ்சிவ் திா்கா தொடக்கி வைத்தாா்.
இதில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் கலந்து கொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினா்.
இந்தப் போட்டியில் திறம்பட ஓவியங்களை வரைந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பிப்ரவரி 1 -ஆம் தேதி நடைபெறும் கடலோரக் காவல் படை தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டப்படுவா் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், கடலோரக் காவல் படை அதிகாரியுமான என். ஜெகதீசன் தெரிவித்தாா்.
மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கடலோரக் காவல் படையினா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.